Monday 11 March 2013

உன் நினைவு என்னும் தீயில்
என் தேகம் தேயுதடி 

என் விழி குழி 
கண்ணீரை 
அறுவடை செய்கிறதடி  ..!!:(
அதில் உன் 
உருவம்
மீன் போல்  நீந்துதடி 

என் நெஞ்சு புரவி போல் 
ஓடுகிறதடி 
நீ 
என்னும் 
கடிவாளம் இல்லையடி  ..!!:(

உன் திசை தேடி 
விசை ஏதும் இல்லாமல் 
வீழ்குறேனடி .!! 

 
என் காதல் மலர 
உன் மகரந்தம் 
தேவையடி 

அதை நாடி  
பறக்குறேனடி
புவி ஈர்ப்பை தாண்டி ..!!

ஒரு நாள் அடைவேன் 
உன் 
மனம் என்னும் 
அந்தபுரத்தை 

மறுபடியும் 
தருவேன் 
என் 
மகரந்தத்தை ..!!!